Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அமெரிக்கா: அமெரிக்காவில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் பலியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள லூயிஸ்டன் என்ற நகரில் மர்மந் அபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளதாகவும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று இரவு நடந்த இந்த துப்பாக்கி சூடு நடத்திய நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரது ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லூயிஸ்டன் நகர மக்கள் கதவுகளை சாத்திக்கொண்டு வீட்டிற்குள் பத்திரமாக இருங்கள் என்றும் சந்தேகப்படும்படியான நபரை கண்டால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் என்றும் கூறப்பட்டுள்ளது.